This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 6 ஜூன், 2009

நாட்டாமை பேசும் நாடுகள் வெட்கித் தலைகுனிய வேண்டும்! - விகடன் சவுக்கடி


கொத்துக் கொத்தாக யூதர்கள் கொன்று குவிக்கப்பட்டது எத்தனை நிஜமோ… அத்தனை நிஜமானதுதான் பல்லாயிரம் தமிழர்களின் துடிதுடித்த மரணமும்கூட!

இந்த மரணங்களுக்கு ஒரு நியாயமான நீதி விசாரணை கட்டாயம் தேவை. இதைச் செய்யத் தவறினால் நாட்டாமை பேசும் நாடுகள் எல்லாம் நாளை வரலாற்றின் முன் வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கும் என்று ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆனந்த விகடனின் இன்றைய தலையங்கம்:

விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிங்கள ராணுவம் குண்டு மழை பொழிந்த முள்ளிவாய்க்கால் இறுதித் தாக்குதலில், அப்பாவித் தமிழ் மக்கள் சுமார் 20 ஆயிரம் பேர் பலியானதாக ஐ.நா. தாக்கல் செய்த இரகசிய அறிக்கையை ஆதாரம் காட்டி, ‘மனித உரிமை மீறல் குறித்த விசாரணை நடக்க வேண்டும்’ என்று ஒரு சில நாடுகள் கோரிக்கை வைத்தன.

“புலிகளை நாங்கள் வென்றதைப் பொறுக்க முடியாமல் இப்படிக் கேட்கிறார்கள். அப்படி எந்த விசாரணையும் தேவை இல்லை” என்று சர்வ சாதாரணமாக அந்த கோரிக்கையைப் புறக்கணித்திருக்கிறது இலங்கை அரசு!

போருக்குத் துளியும் தொடர்பு இல்லாத பொதுமக்கள் வாழ்ந்த பகுதிகளில் இப்போது அணிவகுத்துக் காட்சியளிக்கும் சவக்குழிகளைக் காட்டும் செயற்கைக்கோள் படங்கள், அடிவயிற்றில் அமிலத்தைப் பாய்ச்சுகின்றன.

முகாம்கள் என்ற பெயரில் திறந்தவெளி சிறைச்சாலைகளில் அடைத்துவைக்கப்பட்டு இருக்கும் மிச்சம் மீதித் தமிழர்களின் நிலை குறித்து வரும் தகவல்களோ ரத்தக் கண்ணீரைப் பெருக்கெடுக்கச் செய்கின்றன.

யுத்தம் என்ற பெயரால் அங்கே என்னதான் நடந்தது என்பதை உலகத்தின் பார்வைக்கு வெளிப்படையாக முன்வைக்க இப்போதும்கூட இலங்கை அரசு தயங்கும் மர்மம் என்னவாக இருக்க முடியும்?

மனித உரிமைகள் பற்றிய முழுமையான விழிப்பு உணர்வு ஏற்படாத இரண்டாம் உலகப் போர் காலத்திலேயே, ஹிட்லர் ஆட்சியின் மிருக வெறிச் செயல்களை விசாரித்துத் தண்டிக்க சர்வதேச அளவில் நாடுகள் திரண்டதை மறந்துவிடக் கூடாது.

சண்டித்தனத்தின் உச்சத்துக்கே போய் கடைசியில் தற்கொலை செய்துகொண்டு ஹிட்லர் செத்துப்போனாலும், அவன் தளபதிகளை எல்லாம் சட்டத்தின் முன் நிறுத்திய ‘நூரம்பர்க் விசாரணை’ போலவே, இப்போதும் ஒரு சர்வதேச விசாரணைக்கான தேவை வந்திருக்கிறது!

கொத்துக் கொத்தாக யூதர்கள் கொன்று குவிக்கப்பட்டது எத்தனை நிஜமோ… அத்தனை நிஜமானதுதான் பல்லாயிரம் தமிழர்களின் துடிதுடித்த மரணமும் கூட!

கட்டாயம் தேவை - ஒரு சர்வதேச விசாரணை… உரியவர்களை இதற்கு உடன்படச் செய்யாவிட்டால்… நாட்டாமை பேசும் நாடுகள் எல்லாம் நாளை வரலாற்றின் முன் வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளது விகடன்.

செவ்வாய், 2 ஜூன், 2009

‘இந்தியன் எங்கே… எக்கேடு கெட்டால் நமக்கென்ன!’


தமிழ் மக்களின் மனங்கள் எந்த அளவு வெறுமையின் விளிம்பில்… மரத்துப் போய் கிடக்கின்றன என்பதற்கு ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் நிலையை வெறும் பார்வையாளனாகக் கூட கவனிக்க மறுப்பதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

பொதுவாக இம்மாதிரி தருணங்களில் உணர்ச்சிவசப்பட்டு முதல் கல்லை விட்டெறிபவன் அல்லது ஒங்கிக் குரல் கொடுப்பவன் தமிழனாகவே இருந்திருக்கிறான். எல்லையில் துன்பமென்றாலும் எல்லை தாண்டி எங்கோ ஒரு தேசத்தில் இந்தியன் துன்பப்பட்டாலும் முதலில் துடிப்பவன் தமிழனாகவே இருந்திருக்கிறான்!

ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட இனவெறிக்கு நிகரான ஒரு துயரத்தை இந்திய மாணவர்கள், பகுதி நேர பணியாளர்கள் அனுபவித்துக் கொண்டிருக்க, ‘ஓ அப்படியா’ என்று சாவதானமாகக் கேட்டுவிட்டு அடுத்த காரியத்தைப் பார்க்கப் போய்க் கொண்டிருக்கிறான் தமிழன்.

இந்திய அரசின் அபார சாதனை இது! அதுவும் தனிமனித சாதனையல்ல… சோனியா-மன்மோகன் சிங் - நம்பியார்கள் - மேனன்கள் - முகர்ஜிகள் செய்துள்ள அபார சாதனை!

ஆயிரக்கணக்கில் எம்மவர் கொல்லப்பட்டு, ஒரு இனமே உருத்தெரியாமல் அழிக்கப்பட்ட போது குறைந்தபட்சம் ‘ஏன் இப்படி?’ என்ற மனிதாபிமானக் கேள்வியைக் கூட எழுப்பாமல், அந்த இனவெறிக்கு ஐநா மன்றம் வரை தோன்றாத் துணையாய் நின்ற இந்தியாவும் அதன் மக்களும் எப்படிப் போனால் என்ன? என்ற உணர்வின் வெளிப்பாடுதான் இது.

‘ஈழப் பிரச்சினையை இந்திய அரசு வேடிக்கை பார்ப்பது ஆபத்து… இது இந்தியத் தமிழர்கள் மனதில் நீங்காத காயத்தையும் அதன் வடுக்களையும் மட்டுமே விட்டுச் செல்லும் இந்தப் போக்கு. அது இந்தியன் என்ற உணர்வுக்கே ஆபத்து!’ என்று தமிழுணர்வாளர்கள் குறிப்பிட்டது இப்படியொரு நிலை வரக்கூடாது என்பதற்காகவே.

ஆனால் அப்படிச் சொன்னதற்காக அவர்களை பிரிவினைவாதிகளாக்கி குண்டர் சட்டத்தில் போட்டு தன் பலத்தைக் காட்டியது வெறும் அரசியல் லாபத்தை மட்டுமே கணக்கிட்டுக் கொண்டிருந்த ஆளும் கட்சி.

பிரிவினைவாதம் என்றதும் துப்பாக்கி தூக்கிக் கொண்டு தனிநாடு கேட்பது மட்டும்தான் என்று நினைப்பது எத்தனை அபத்தம்… ஒரு இனத்தை மனதால் அந்நியப்படுத்தி விட்டாலே போதாதா… இன்று சக இந்தியனுக்கு என்ன நேர்ந்தாலும் அது குறித்த குறைந்தபட்ச அக்கறை கூட காட்ட மனமின்றி இறுகிக் கிடக்கிறது தமிழன் மனம்.

ஏர் பிரான்ஸ் விமானம் 228 பேருடன் விழுந்து நொறுங்கியதற்குக் கலங்கும் தமிழன் விழிகள், ஆஸ்திரேலியாவில் அவதிப்படும் சக இந்தியனுக்கு கலங்க மறுப்பதை இப்போதும் இந்தியா அலட்சியப்படுத்தினால், அது மாபெரும் வரலாற்றுத் தவறாகவே முடியும்!

-விதுரன்